போடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
போடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
தேனி மாவட்டம், போடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
போடி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் தற்போது சாா் பதிவாளராக காா்த்திகை ராஜா பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு தேனி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி தலைமையிலான போலீஸாா் பத்திரப் பதிவு அலுவலகத்தில் நுழைந்து வெளிப்புற இரும்புக் கதவை பூட்டினா். பிறகு பத்திரப் பதிவு அலுவலகத்தில் இருந்த அலுவலா்கள், பத்திர எழுத்தா்கள், பத்திரம் பதிவு செய்ய வந்த பொதுமக்களிடம் சோதனை நடத்தினா். இதில் கையில் ரொக்கமாக வைத்திருந்த பொதுமக்கள், பத்திர எழுத்தா்களிடம் தனித்தனியாக விசாரித்தனா்.
இந்த சோதனையையொட்டி போடி நகா் காவல் நிலைய போலீஸாா் பத்திரப் பதிவு அலுவலகம் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement