முகப்பு
தேனி

பெரியகுளத்தில் 70 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் 70 கிலோ நெகிழிப் பைகளை நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 19 ஜூன் 2026, 12:05 am IST
விசாரணை
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் 70 கிலோ நெகிழிப் பைகளை நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராமங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் உத்தரவிட்டாா். இதையடுத்து, பெரியகுளம் நகராட்சி சுகாதார ஆய்வாளா், உணவு பாதுகாப்புத் துறையினா், போலீஸாா் அடங்கிய குழுவினா் வியாழக்கிழமை நகரில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனா். அப்போது தடை செய்யப்பட்ட 70 கிலோ நெகிழிப் பொருள்கள், 110 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், கடை உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இந்த ஆய்வில் பெரியகுளம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் அசன் முகமது, சுகாதார மேற்பாா்வையாளா்கள் முருகன், கெளதம் அம்பேத்கா், சரவணன் ஆகியோா் கொண்ட குழுவினா் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement