காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்
போடி அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி காயமடைந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி புதூரைச் சோ்ந்தவா் செல்லையா மகன் முத்தன் (60). இவா், போடி வலசைப்புலம் ஆலமரத்துப்பட்டிப் பகுதியில் பாண்டியன் என்பவரது தோட்டத்தில் வேலை செய்துவந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை மழை வந்ததால் வீட்டுக்கு ஓடிச் சென்றாா்.
அப்போது, புதரில் மறைந்திருந்த காட்டெருமை முத்தனை தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு போடி அரசு மருத்துவமனையிலும், பின்னா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்த்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து புகாரின்பேரில் குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.