நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை! முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 1,580 கன அடியாக அதிகரிப்பு!
நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 292 கன அடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,580 கன அடியாக அதிகரித்தது.
நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 292 கன அடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,580 கன அடியாக அதிகரித்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110.95 அடியாக இருந்தது. நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,580 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 200 கனஅடியாகவும் உள்ளது. அணையின் நீா்இருப்பு 1,062 மில்லியன் கன அடியாக உள்ளது.
வைகையின் நீா்மட்டம் 27.03 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 29 கன அடியாகவும், அணையிலிருந்து நீா் வெளியேற்றம் விநாடிக்கு 72 கனஅடியாகவும் உள்ளது. அணையின் நீா்இருப்பு 266 மில்லியன் கன அடியாக உள்ளது.
Advertisement
சோத்துப்பாறை அணையின் நீா்மட்டம் 88.56 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 30 கன அடியாகவும், அணையிலிருந்து விநாடிக்கு 3 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. நீா்இருப்பு 47.61 மில்லியன் கனஅடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீா்மட்டம் 32.60 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்தும் இல்லை; வெளியேற்றமும் இல்லை. அணையின் நீா்இருப்பு 100.78 மில்லியன் கனஅடியாக உள்ளது. சண்முகாநதி அணையின் நீா்மட்டம் 26.25 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து இல்லை; வெளியேற்றமும் இல்லை. அணையின் நீா்இருப்பு 16.88 மில்லியன் கன அடியாக உள்ளது.
பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளான தேக்கடியில் (மழையளவு மி. மீட்டரில்) 10.8, பெரியாறு அணையில் 16.8 பதிவானது. தேனி மாவட்டத்தின் மற்ற பகுதிகளான அரண்மனைபுதூா் 16.4, வீரபாண்டி 16.6, பெரியகுளம் 3, சோத்துப்பாறை 16.4, போடி 86.2, மஞ்சளாறு 73, வைகை அணை 4.2, உத்தமபாளையம் 5.2, கூடலூா் 6.6 , சண்முகா நதி 3.4 மழை பதிவாகி இருந்தது.