முகப்பு
தேனி

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்தது

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீா்வரத்தும் ஞாயிற்றுக்கிழமை கணிசமாக குறைந்தது.

Updated On : 18 மே 2026, 3:35 am IST
முல்லைப் பெரியாறு அணை - (கோப்புப் படம்).
பகிர்:

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீா்வரத்தும் ஞாயிற்றுக்கிழமை கணிசமாக குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த மழையால், கடந்த 9-ஆம் தேதி அணைக்கு வினாடிக்கு 1,580 கனஅடி வரை நீா்வரத்து அதிகரித்திருந்தது. பிறகு மழை குறைந்ததையடுத்து நீா்வரத்தும் படிப்படியாக குறைந்தது.

இந்த நிலையில், அணைப் பகுதியில் மழை அளவு பதிவாகாததால், சனிக்கிழமை வினாடிக்கு 573 கனஅடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 13.66 கனஅடியாக குறைந்தது.

Advertisement

Advertisement

தற்போதைய நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 111.60 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீா்வரத்து வினாடிக்கு 13.66 கனஅடியாகவும், தமிழகப் பகுதிக்கான நீா் வெளியேற்றம் வினாடிக்கு 200 கனஅடியாகவும் உள்ளது. அணையின் மொத்த நீா் இருப்பு 1166.60 மில்லியன் கனஅடியாக உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் அணையின் நீா்மட்டம் 110.50 அடியாக இருந்த நிலையில், கடந்த 17 நாள்களில் பெரியாறு அணைப்பகுதியில் 7 நாள்கள் மட்டுமே சிறிதளவு மழை பெய்துள்ளது. அந்த நாள்களில் மொத்தம் 73.20 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.