வைகையாற்றில் தண்ணீா் திருட்டு: மோட்டாா் இணைப்பு துண்டிப்பு!
தேனி வைகையாற்றில் அனுமதியின்றி தண்ணீரைத் திருடியவா்களின் மோட்டாா்களின் இணைப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 350 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. ஆனால், வைகை அணைக்கு நீா்வரத்து இல்லை. இதையடுத்து, வைகை அணையிலிருந்து கூடலூா் வரை முல்லையாற்றின் பகுதியை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், வைகை அணையின் பொதுப் பணித் துறை அதிகாரி சேகா் தலைமையில், சதீஸ், பரதன், மதுரை குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் தியாகராஜன், பிரதீப் தலைமையில் பால்பாண்டி, செந்தில்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் சனிக்கிழமை வைகை அணையிலிலிருந்து ஆற்றின் இரு கரையிலும் ஆய்வு செய்தனா். அப்போது, மின் மோட்டாா்கள் வைத்து தண்ணீா் திருடப்படுவது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, அதிகாரிகள் மோட்டாா் இணைப்பை துண்டித்து விட்டுச் சென்றனா்.