மழலையர் பள்ளியில் கராத்தே திறனாய்வு தேர்வு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒயிட் ஃபீல்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் கராத்தே திறனாய்வுத் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒயிட் ஃபீல்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் கராத்தே திறனாய்வுத் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது.
இன்டர்நேஷனல் சோட்டோகான் கராத்தே அகாதெமி ஆப் இந்தியா சார்பில் அதன் தலைமை பயிற்சியாளர் சென்சாய்
எம்.செபஸ்தியான், மாநில பயிற்சியாளர்கள் சென்சாய் விக்னேஷ்மாறன், சென்சாய் உதயகுமார் ஆகியோர் இத்தேர்வினை நடத்தினர்.
இதில், பள்ளியின் 40 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு, பச்சை உள்ளிட்ட பல்வேறு வண்ணப் பட்டைகள் அவரவர் தகுதிக்கேற்ப வழங்கப்பட்டன. திறனாய்வுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் எல்.ராஜாராம், முதல்வர் பி.வனிதா, துணை முதல்வர் சி.தேவி, ஆசிரியர்கள் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.