ரேஷன் அரிசியை மாவாக்கி விற்பனை: ராஜபாளையம் அருகே ஆலைக்கு "சீல்' வைப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரேஷன் அரிசியை மாவாக்கி விற்பனை செய்த மாவு ஆலைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரேஷன் அரிசியை மாவாக்கி விற்பனை செய்த மாவு ஆலைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
தளவாய்புரம் அரிசி ஆலையில், ரேஷன் அரிசியை மாவாக்கி, மாட்டுத்தீவனமாக விற்பதாக ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு புகார் வந்தது. அதன்பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தளவாய்புரம் பால் டிப்போ அருகில் உள்ள மாவு மில்லை ஆய்வு செய்த போது, 250 கிலோ ரேஷன் அரிசியினை, மூட்டைகளில் மறைத்து வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. பொதுமக்களிடம் கிலோ ரூ.5 விலையில், ரேஷன் அரிசியை வாங்கி அரைத்து, மாட்டுத்தீவனத்திற்கு வெளிச்சந்தையில் விற்று வருவது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து மாவு ஆலைக்கு அதிகாரிகள் "சீல்' வைத்தனர். கைப்பற்றப்பட்ட அரிசியினை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைத்தனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு, பரிந்துரை செய்துள்ளதாக ராஜபாளையம் தனி வட்டாட்சியர் சீனிவாசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.