அருப்புக்கோட்டை கல்லூரியில் எய்ட்ஸ் காசநோய் பரிசோதனை முகாம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் எய்ட்ஸ் மற்றும் காசநோய் பரிசோதனை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் எய்ட்ஸ் மற்றும் காசநோய் பரிசோதனை முகாம் அக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சுழியிலுள்ள ஐசிடிசி மையமும் இக் கல்லூரியும் இணைந்து நடத்திய முகாமிற்குக் கல்லூரி முதல்வர் எஸ்.பாண்டியராஜன் தலைமை வகித்தார். துணை முதல்வர் இசக்கித்துரை முன்னிலை வகித்தார். முகாமில் பேசிய முதல்வர் பாண்டியராஜன், ஆரோக்கியமே செல்வம் என்பது பற்றியும், நோய் வரும் முன் காப்போம் என்பது பற்றியும் மாணவர்களிடையே விளக்கினார். இதில், ஐசிடிசி மைய ஆலோசகர் விஜயலட்சுமி எய்ட்ஸ் மற்றும் காசநோய் விழிப்புணர்வு குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து 100-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் தாமாக முன்வந்து எய்ட்ஸ் மற்றும் காசநோய் குறித்த மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் முனைவர் சி.செல்லப்பாண்டியன், செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலர் எஸ்.குமார் ஆகியோர் செய்திருந்தனர். நிர்வாகி எஸ்.குமார் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.