முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் நடத்தப்படும் சோதனை பற்றி...

Updated On : 25 ஜூன் 2026, 11:30 am IST
பழனியப்பா தெருவில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் வீட்டில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்த வாகனம். - Dinamani
பகிர்:

கரூர்: கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ். என்றழைக்கப்படும் எம். சி. சங்கர் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் வியாழக்கிழமை காலை சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழனியப்பா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான எம்.சி. சங்கர் வீட்டிற்கு வியாழக்கிழமை காலை வந்த ஐந்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திக் (திருச்சி), பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட தெற்கு மந்தை தெருவில் உள்ள பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் ரஃபிக் (சென்னை) ஆகியோர் வீட்டில் இன்று காலைமுதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கரூரிலும் அரசு ஒப்பந்ததாரர் மற்றும் உதவி செயற்பொறியாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

Anti-Corruption Department raids Senthil Balaji's friend's house

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments