ஸ்ரீவில்லிப்புத்தூரில் 52 மது பாட்டில்கள் கடத்தல்: மின்வாரிய ஊழியர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் 52 மது பாட்டில்களைக் கடத்திய மின்வாரிய ஊழியரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 52 மது பாட்டில்களைக் கடத்திய மின்வாரிய ஊழியரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், அத்திகுளத்தைச் சேர்ந்தவர் செண்பகமூர்த்தி (39). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மின்வாரியத்தில் கணக்கீட்டாளராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் 52 மது பாட்டில்களை கடத்திச் சென்றதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் நகர் காவல் சார்பு -ஆய்வாளர் முத்துக்குமரன், அத்திகுளம் ரயில்வே கடவுப்பாதை அருகே மதுபாட்டில்களுடன் சென்று கொண்டிருந்த செண்பகமூர்த்தியைக் கைது செய்தார்.
மேலும் அவரிடமிருந்து மதுபாட்டில்களையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.