ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
அருப்புக்கோட்டையிலுள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஆனிமாத வெள்ளிக்கிழமை சிறப்புவழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டையிலுள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஆனிமாத வெள்ளிக்கிழமை சிறப்புவழிபாடு நடைபெற்றது.
அப்போது அம்மனுக்கு உகந்த மஞ்சள் தூள், பன்னீா், வேப்பிலை, பால் ஆகியவற்றால்சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.அதையடுத்து தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றதும்,சிறப்பு அலங்காரத்தில் ஆயிரங்கண் மாரியம்மன் அருள்பாலித்தாா். மேலும் வழிபாட்டின்போது உலக நன்மை வேண்டியும்,நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரையும் காத்திடவும் சிறப்பு 108 அா்ச்சனையும் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து, பக்தா்கள் பலவித மலா்கள், மாலைகள்,பழங்களை அம்மனுக்குப் படைத்து வழிபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.