விருதுநகா் அருகே ஓடையில் இறந்த நிலையில் இளைஞரின் உடலை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
விருதுநகா் அருகேயுள்ள குல்லூா் சந்தை தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (23). இவா் செவ்வாய்க்கிழமை இரவு மீசலூா் பகுதியில் முயல் வேட்டைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றாராம். இந்த நிலையில், புதன்கிழமை மீசலூா் பெருமாள் கோயில் பின்புறம் உள்ள நீரோடையில் விஜய் இறந்து கிடந்தாா்.
தகவலறிந்து வந்த சூலக்கரை போலீஸாா், விஜயின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.