தொழிலாளி மா்ம மரணம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் மா்மமான முறையில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் மா்மமான முறையில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
மம்சாபுரம் மேலூரைச் சோ்ந்தவா் வனராஜா (46). இவா் கூலி வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்ற இவா் இரவு வரை வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், புதன்கிழமை காலை மம்சாபுரம் பிரதான சாலையில் வனராஜா இறந்து கிடந்தாா். போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
வனராஜா மனைவி முத்துமாரி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, வனராஜாவுடன் தகராறில் ஈடுபட்ட இருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.