சாலை விபத்தில் உரிழந்தவரின் உறவினா்கள் போராட்டம்
சாத்தூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாத்தூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா்-சிவகாசி சாலையில் உள்ள மேட்டமலை குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (44). இவா் கடந்த இரு தினங்களுக்கு முன் மேட்டமலை-சாத்தூா் சாலையைக் கடந்து குடியிருப்புக்கு எதிரே உள்ள எட்டூா்வட்டம் இணைப்புச் சாலைக்கு நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைகாக சோ்த்தனா். பின்னா், மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அவரது உறவினா்கள், மேட்டமலை குடியிருப்பு பொதுமக்கள் புதன்கிழமை மாலையில் சாத்தூா்-சிவகாசி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த சாத்தூா் நகா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
சாத்தூா்-சிவகாசி சாலையில் குடியிருப்புப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். ராஜ் இறப்புக்கு காரணமான வாகனத்தை கண்டுபடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்புப் பகுதியில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவா்கள் வலியுறுத்தினா். பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.