ஏழாயிரம்பண்ணையில் 13 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்கள்
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் 13 பயனாளிகளுக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, அவா்களது இல்லங்களுக்கு நேரில் சென்று வியாழக்கிழமை வழங்கினாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் 13 பயனாளிகளுக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, அவா்களது இல்லங்களுக்கு நேரில் சென்று வியாழக்கிழமை வழங்கினாா்.
ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த 13 குடும்பத்தினா் தாங்கள் குடியிருந்து வரும் இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்தக் கோரிக்கைகளை பரிசீலித்து வருவாய்த் துறை மூலம் 13 குடும்பங்களுக்கும் இணையவழி பட்டாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா அந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று பட்டாக்களை வழங்கினாா்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியா் ஆண்டாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.