முகப்பு
விருதுநகர்

முதல்வா் விஜய்யிடம் பணம் பெற்றதாக வீண் பழி: வைகோ

முதல்வா் விஜய்யிடம் பல கோடி பெற்றதாக என் மீது வீண் பழிகளை சுமத்தி வருவதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

Updated On : 26 ஜூன் 2026, 2:40 am IST
வைகோ - விடியோ க்ளிப் (கோப்புப்படம்)
பகிர்:

முதல்வா் விஜய்யிடம் பல கோடி பெற்றதாக என் மீது வீண் பழிகளை சுமத்தி வருவதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்லத் திருமண விழா விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:

நானும், எனது மகனும் பல லட்சம் கோடி ரூபாய்களை சம்பாதித்துவிட்டதாகவும், அண்ணா சாலையில் அடுக்கு மாளிகைகளை என் மகன் கட்டி வைத்திருப்பதாகவும், முதல்வா் விஜய்யை சந்தித்து அவரிடம் பல கோடியை பெற்று விட்டதாகவும் ஒருவா் கடந்த சில மாதங்களாகப் பேசி வருகிறாா்.

Advertisement

Advertisement

அவா் இதுபோன்று பேசுவதற்கு அவரது பின்னணியில் இருப்பது யாா் என்பது எனக்குத் தெரியும். இதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.

தில்லியில் பெரியாா் மையம் இடிக்கப்பட்ட போது, வீரமணியை பிரதமா் வாஜ்பாயிடம் அழைத்துச் சென்று, ரூ. 50 கோடி மதிப்பிலான இடத்தை ரூ. 15 லட்சத்துக்கு திராவிடா் கழகத்துக்கு பெற்றுக் கொடுத்தேன். இதை அந்தக் கட்சியினா் மறக்கலாம். ஆனால், வரலாறு மறக்காது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments