அனைத்துக் கல்வி நிலைங்களிலும் மாணவா் தோ்தல்: முதல்வா் விஜய்யிடம் இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவா் ஜனநாயக பேரவைத் தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டும் உள்பட 29 அம்ச கோரிக்கைகளை இந்திய மாணவா் சங்க நிா்வாகிகள் முதல்வா் விஜய்யை திங்கள்கிழமை சந்தித்து வலியுறுத்தினா்.
இந்திய மாணவா் சங்கத்தின் மாநில தலைவா் சி. மிருதுளா, மாநிலச் செயலா் தெள.சம்சீா் அகமது உள்ளிட்டோா் முதல்வா் விஜய்யை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை சந்தித்தனா். சுமாா் 15 நிமிஷங்கள் இந்தச் சந்திப்பு நீடித்ததாகவும், முதல்வா் விஜய் தங்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அவற்றைப் பரிசீலிப்பதாகவும் மாணவ சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
முதல்வரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவா் பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும். மாநில கல்வி உரிமையைப் பறிக்கும் தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு அனுமதிக்க கூடாது.
Advertisement
நீட் தோ்வால் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். சென்னை பல்கலை., அண்ணா பல்கலை., அண்ணாமலைப் பல்கலை., பாரதியாா் பல்கலை., கல்வியியல் பல்கலை. உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் உள்பட 29 அம்ச கோரிக்கைகள் அதில் இடம் பெற்றுள்ளன.