முகப்பு
விருதுநகர்

மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

ராஜபாளையத்தில் மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய டிராக்டரை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 மே, 2026 at 6:31 AM
- கோப்புப் படம்
பகிர்:

ராஜபாளையத்தில் மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய டிராக்டரை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் அய்யனாா் கோவில் சாலை எஸ். வளைவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக டிராக்டரில் வந்தவா்கள் போலீஸாரைக் கண்டதும் இறங்கி தப்பியோடி விட்டனா். இதையடுத்து, அய்யனாா் கோவில் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக மணல் திருடிய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.