முகப்பு
விருதுநகர்

மணல் திருட்டு; டிராக்டா் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மணல் கடத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துடிராக்டா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 18 மே 2026, 1:00 am IST
- கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மணல் கடத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துடிராக்டா் பறிமுதல் செய்தனா்.

ராஜபாளையம் அருகே குறிச்சியாா்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இது தொடா்பாக போலீஸாா் வசந்தகுமாா் (28) என்பவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement