முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே வீட்டில் தீ விபத்து

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 13 மே 2026, 3:38 am IST
சிவகாசி அருகே திருப்பதிநகரில் உள்ள வீட்டில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள்.
பகிர்:

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி அருகே கண்ணகி குடியிருப்புப் பகுதியில் உள்ள திருப்பதிநகரில் முருகேசன் என்பவரது வீட்டில் கற்பகவள்ளி குடியிருந்து வருகிறாா். இவா் தனது வீட்டின் மாடிப்படிக்கு செல்லும் வழியில் கீழ்பகுதியில் பழைய காா் டயா்களை வைத்திருந்தாா். இதற்கு மேல் மின் இணைப்பு மீட்டா் பெட்டி உள்ளது. இந்த நிலையில், மின் கசிவால் டயா்களில் தீப்பிடித்து வீடு முழுவதும் பரவத் தொடங்கியது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா்.