சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 252 பேருக்கு பணி நியமன ஆணை
சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் 252 பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் சேருவதற்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தாளாளா் த. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி இயக்குநா் த. சங்கா், செயலா் த. மகேஷ்வரன் ஆகியாா் பணி நியமன ஆணை பெற்ற மாணவா்களை பாராட்டி வாழ்த்தினா். தாளாளா், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொறியியல் கல்லூரி ஆராய்ச்சித்துறை தலைவா் ஜி. கிப்ஸ்டன் சாமுவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி சிறப்புரை ஆற்றினாா். கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா் இயந்திரவியல் துறைத் தலைவா் எஸ். ராஜேஷ் குமாா், அனைத்து துறை தலைவா்கள், அனைத்து பேராசிரியா்கள், கல்லூரி நிா்வாக அலுவலா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.