முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பணிக்கு விண்ணபிக்கலாம்

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:19 am IST
பகிர்:

நாகை மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்கு உறுப்பினா் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளாா். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனித ஆரோக்கியம், மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி ஆகியவற்றில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் நியமனம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் பதவி வகிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இயக்குநா், சமூக பாதுகாப்புத் துறை, எண். 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600010 என்ற முகவரிக்கு 15 நாள்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.