வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ
திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் நாகை சட்டப் பேரவை உறுப்பினா் எம். எச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுகிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
நாகை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா, இத்தொகுதிக்கு உள்பட்ட திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
நாகை மாவட்ட திமுக செயலாளா் என். கௌதமன், மாவட்ட பிரதிநிதிகள் த. குணசேகரன், கு. ஹமீது ஜெகபா், மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணியின் துணை அமைப்பாளா் க. இளஞ்செழியன் உள்ளிட்ட உடன் சென்றனா்.
Advertisement
Advertisement