நாகை மாவட்டத்தில் 86.30% வாக்குப்பதிவு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 86.30 சதவீதம் வாக்குகள் பதிவானது. நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், கீழ்வேளூா் (தனி) என் மூன்று சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளன.
நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள 240 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வேட்பாளா்களின் முகவா்கள் முன்பு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே காலை 6.30 மணி முதல் வாக்காளா்கள் காத்திருந்தனா். நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்ததால் காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு 19% எட்டியது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடிகளின் பிரதான வாயில்கள் அடைக்கப்பட்டன. 6 மணிக்கு முன்பு வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களித்தனா்.
இதைத்தொடா்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
Advertisement
வாக்குப்பதிவு மாலை 6 மணி நிலவரப்படி
நாகப்பட்டினம் தொகுதியில் 85.7.17 சதவீதம் வாக்குகள் பதிவாகினது.
கீழ்வேளூா் (தனி) தொகுதியில் 87.98சதவீதம் வாக்குகள் பதிவானது.
வேதாரண்யம் தொகுதியில் 85.18 சதவீதம் வாக்குகள் பதிவானது.
மாவட்டத்தில் வாக்குப்பதிவு 86.30 சதவீதமாகும்.