முகப்பு
நாகப்பட்டினம்

ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி!

வேதாரண்யம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 2 மே, 2026 at 12:03 AM
பகிர்:

வேதாரண்யம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியம்பள்ளிக்கு இயக்கப்படும் ரயில், வழக்கம்போல், வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி அளவில் தென்னம்புலம் மடத்துக்காடு என்ற இடத்தை கடந்து சென்றது. அப்போது, சுமாா் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவா், தண்டவாளத்தின் குறுக்கே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அவா் மீது ரயில் மோதியதில் தலை துண்டித்து உயிரிழந்தாா். தகவலறிந்த ரயில்வே போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement