இலவச யோகா பயிற்சி
காரைக்கால் பள்ளியில் இந்திய ஆயுஷ் அமைச்சக ஆதரவுடன் மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
காரைக்கால் பள்ளியில் இந்திய ஆயுஷ் அமைச்சக ஆதரவுடன் மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் யோகா மற்றும் ஆராய்ச்சி மையம், காரைக்கால் கலெக்ஸோ சேவை அமைப்பு ஆகியவை இணைந்து, காரைக்கால் காவிரி பொதுப் பள்ளியில் சுவாமி விவேகானந்தா யோகா பூங்கா மூலம் யோகா பயிற்சி அண்மையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் சிவகுமார் தலைமை வகித்தார்.
கலெக்ஸோ சேவை அமைப்பின் ஆலோசனைக் குழு தலைவர் பாரீஸ்ரவி, யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், கோட்டுச்சேரி கலெக்ஸோ மையத்தில் நடைபெற்றுவரும் இலவச யோகா பயிற்சி குறித்தும் மாணவ மாணவியருக்கு விளக்கிப் பேசினார்.
மன அழுத்தம் நீங்கி, மனம் ஒருமைப்படுவதால் கல்வி மேம்படும். எனவே மாணவர்கள் யோகா பயிற்சியை கண்டிப்பாக தகுதியானவர்களிடம் பெற்று, தினமும் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
யோகா பேராசிரியர் ஆனந்த், மாணவ மாணவியருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் சுமார் 100 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அருள் செய்திருந்தார்.