துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் நாளை குறைகேட்பு
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மாவட்ட பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை (ஏப். 20) குறைகளைக் கேட்கவுள்ளார் என்று மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்தார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மாவட்ட பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை (ஏப். 20) குறைகளைக் கேட்கவுள்ளார் என்று மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
புதுச்சேரி துணை நிலை ஆளுநர், காரைக்கால் மாவட்ட பொதுமக்களிடம் குறைகளைக் காணொலி மூலம் கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (ஏப். 20) மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து, அதற்குத் தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். புகார்களை எழுத்து வடிவில் அளிக்க வேண்டும்.