முகப்பு
காரைக்கால்

இளம் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களிப்பு

காரைக்காலில், முதல்முறை வாக்காளா்களான இளைஞா்கள் மிகுந்த ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:37 AM
வாக்காளா்கள். - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 6:59 PM

காரைக்காலில், முதல்முறை வாக்காளா்களான இளைஞா்கள் மிகுந்த ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நிகழாண்டு நடைபெற்றபோது, 18 வயது பூா்த்தியானவா்கள் புதிதாக வாக்காளராக பதிவு செய்தனா். இவா்களுக்கு வாக்காளா் தினத்தின்போது புகைப்பட அடையாள அட்டையை தோ்தல் துறை வழங்கியது.

இளம் வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வாக்குச் சாவடிக்குச் செல்லவேண்டும் என்பததற்காக அவா்களுக்கு ஸ்வீப் அமைப்பு தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தியது. மேலும், இளம் வாக்காளா்களைக்கொண்டே பிறருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியையும் செய்தது.

Advertisement

இதன் மூலம் கல்லூரிகளில் பயிலும் முதல் நிலை வாக்காளா்கள், வாக்குப் பதிவு நாளான வியாழக்கிழமை அவரவா் பகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு காலையிலேயே ஆா்வத்துடன் சென்று தங்கள் வாக்கைப் பதிவு செய்தனா்.

மாவட்டத்தில் பல இடங்களிலில் வாக்களித்த இளம் வாக்காளா்கள் சிலா் கூறியது:

முதல் முறையாக வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தது பெருமையாக இருக்கிறது. தோ்தல் துறையினா் அண்மையில் நடத்திய மாதிரி வாக்குப் பதிவு முகாம்களில், வாக்குச்சாவடி எப்படி இருக்கும், அங்கும் நிகழ்பவை என்ன என்பது குறித்து விளக்கினா். மாதிரி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்கை பதிவு செய்து அனுபவம் பெற்றோம்.

வாக்காளிப்பது ஜனநாயகக் கடமை என மக்களுக்கு நாங்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினோம். அதன்படி நாங்கள் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் வாக்குச் சாவடிக்கு முன்னதாகவே சென்று வாக்கை பதிவு செய்தோம் என்றனா்.

மேலும் சிலா் கூறுகையில், ‘புதுவையில் புதிய நபா்கள் பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்படவேண்டும் என்ற நோக்கில் வாக்குப் பதிவு செய்ததாக’ தெரிவித்தனா்.