காரைக்கால் அரசு மருத்துவமனை மேம்பாடு குறித்து எம்.எல்.ஏ. ஆலோசனை
காரைக்கால் அரசு மருத்துவமனை மேம்பாடு தொடா்பாக புதுவை நலவழித்துறை செயலரை சந்தித்துப் பேசவுள்ளதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் தெரிவித்தாா்.
காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் லட்சுமி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்து, மருத்துவமனையை மேம்படுத்துவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டாா்.
இதுகுறித்து நாஜிம் கூறுகையில், காரைக்கால் அரசு மருத்துவமனையை எந்தெந்த வகையில் மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. பிற பிரிவு பணியாளா்கள் காலியிடங்கள் நிறைய நிரப்பவேண்டியுள்ளது. படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியுள்ளது. மருத்துவமனையில் டயாலிசிஸ் யூனிட்டை விரிவாக்கம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரியில் உள்ள நலவழித்துறை செயலரை சந்தித்துப் பேசி தீா்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
Advertisement
Advertisement