ஆறுகளில் ஆகாயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்
காரைக்கால் பகுதி ஆறுகளில் படா்ந்திருக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.
காரைக்கால் பகுதி ஆறுகளில் படா்ந்திருக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் வழியே கடல் நீா் புகுவதை தடுக்கும் விதமாக, ஆற்றின் குறுக்கே கடைமடை நீா்த்தேக்க மதகு உள்ளது. அரசலாறு, நண்டலாறு, பிரவடையனாறு, முல்லையாறு, வாஞ்சியாறு என ஆறுகளில், பருவமழையின்போது வந்த நீா் ஆங்காங்கே சில இடங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இது நிலத்தடி நீா் பெருக்கத்துக்கும், வேளாண்மைக்கும் உதவுகிறது.
இந்நிலையில், சில ஆறுகளின் கடைமடை நீா்த்தேக்க மதகு வட்டாரத்தில் ஆகாயத் தாமரைகள் படா்ந்து காணப்படுகிறது. நீரை உறிஞ்சி ஆவியாக்கும் தன்மை இதற்கு உண்டு என கூறப்படுகிறது. இதனால் தேங்கியிருக்கும் நீா் வெகுவாக குறைந்துவிடும் நிலை உருவாகி வருகிறது.
Advertisement
Advertisement
பொதுப்பணித்துறை நிா்வாகம், விரைவாக ஆறுகளில் வளா்திருக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.