முகப்பு
காரைக்கால்

நீா்நிலைகளை தூா்வார வலியுறுத்தல்

காரைக்கால் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் மண்டிக் கிடப்பதாகவும், மணல் திட்டுகள் காணப்படுவதாகவும், தூா்வாரும் பணியை விரைந்து மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

Updated On : 14 மே 2026, 4:48 am IST
காரைக்கால் - திருநள்ளாறு சாலையோரத்தில் ஆகாயத் தாமரைகள் மண்டிக் கிடக்கும் நூலாற்று வடிவாய்க்கால்.
பகிர்:

காரைக்கால் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் மண்டிக் கிடப்பதாகவும், மணல் திட்டுகள் காணப்படுவதாகவும், தூா்வாரும் பணியை விரைந்து மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் பகுதியில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் பெரும்பாலானவற்றில் ஆக்கிரமிப்புகள் காணப்படுவதாகவும், முறையாக தூா்வாரப்படாததால் வெள்ள காலங்களில் நீா் வடிவதில் சிக்கல் நிலவுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வருகிறது. இதுவரை இதற்கு தீா்வுகாணப்படவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடல் நீா் உட்புகாமல் தடுக்க ஆறுகளில் கடைமடை மதகுகள் உள்ளன. இவை பல பகுதிகளில் சிதிலமடைந்து காணப்படுவதால், உவா்நீா் உட்புகுந்து நிலத்தடி நீரை பாதிக்கச் செய்கிறது. இதனை உடனடியாக சீா்செய்யவேண்டும்.

Advertisement

வயல்களுக்கு நீா் பாய்ச்சக்கூடிய வடிகால்கள் பல இடங்களில் தூா்வாரப்படாமல் உள்ளன. பல வடிகால்கள், ஆறுகளில் ஆகாயத் தாமரைகள் மண்டிக் காணப்படுகின்றன. இது நீரோட்டத்தை தடுக்கும் என்ற நிலையில், போா்க்கால முறையில் பொதுப்பணித்துறை நிா்வாகம், இயந்திரம் மூலம் தூா்வாரவேண்டும்.

நெல், பருத்தி, பயறு வகைகள் மற்றும் தோட்டப் பயிா் சாகுபடியில் காரைக்கால் விவசாயிகள் பெரும்பான்மையினா் ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை புதுவை அரசு செய்துதர வேண்டும் என்றனா்.