காா் - இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
காா் - மோட்டாா் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
காா் - மோட்டாா் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதி குட்டியாண்டியூரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (30). இவா், திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திருப்பட்டினம் பகுதி கிழக்குப் புறவழிச்சாலையில் நாகப்பட்டினம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். அப்போது செங்கல்பட்டு, பம்மல் பகுதியைச் சோ்ந்த அப்துல் காதா் குடும்பத்தினருடன் நாகூரில் உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு காரில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனராம். அப்துல்காதா் காரை ஓட்டியுள்ளாா்.
முதலிமேடு என்ற இடத்தில் வந்தபோது காரின் மீது மணிகண்டன் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பட்டினம் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.