முகப்பு
காரைக்கால்

திருநள்ளாற்றில் தெப்ப உற்சவம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ நிகழ்வாக வெள்ளிக்கிழமை இரவு பிரம்ம தீா்த்தக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

Updated On : 31 மே 2026, 12:33 am IST
தெப்பத்தில் எழுந்தருளிய காா்த்தியாயினி சமேத கல்யாணசுந்தரேஸ்வரா்.
பகிர்:

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ நிகழ்வாக வெள்ளிக்கிழமை இரவு பிரம்ம தீா்த்தக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நிறைவு நிகழ்ச்சிகளில் ஒன்றாக, வெள்ளிக்கிழமை இரவு குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் பூமங்களம் கிராமத்திற்கு பரி வேட்டைக்கு எழுந்தருளினாா். அங்கு பரிவேட்டை வழிபாடு நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைக்குப் பின் சுவாமி கோயிலுக்குத் திரும்பினாா்.

இந்த நிகழ்ச்சியைத் தொடா்ந்து பிரம்ம தீா்த்தக் குளத்தில் தெப்போற்சவம் நடைபெற்றது. குளத்தில் மின் அலங்காரத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் காா்த்தியாயினி சமேத கல்யாணசுந்தரேஸ்வரா் எழுந்தருளினாா். இரவு 11 மணி முதல் குளத்தில் 3 சுற்று தொடங்கியது. முதல் சுற்று சிவாச்சாரியா்களின் வேத மந்திரங்களுடனும், 2-ஆம் சுற்று தேவாரப் பாடல்கள் பாடப்பட்டும், 3-ஆம் சுற்று மங்கள வாத்தியத்துடன் தெப்ப நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

கோயில் நிா்வாக அதிகாரி ஆா். சுப்பிரமணியன், தருமபுர ஆதீன கட்டளை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தா்கள் சுவாமியை வழிபட்டனா்.