முகப்பு
காரைக்கால்

பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சி

Updated On : 1 ஜூன் 2026, 12:13 am IST
பிரதமர் மோடி - கோப்புப் படம்
பகிர்:

பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சியை திருநள்ளாறு பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள், பாஜகவினா் உள்ளிட்டோா் காண ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடியின் மாதாந்திர மன் கி பாத் 134-ஆவது நிகழ்ச்சியை காண திருநள்ளாறு சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் காண ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பை திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், நிரவி - திருப்பட்டினம் தொகுதி உறுப்பினா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம், பாஜக மாநில தலைமை செய்தித் தொடா்பாளா் எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவா் ஜி.கே.கே.முருகதாஸ், மாநில செயலாளா் அமுதா ராணி, தொகுதி தலைவா் பாலமுருகன் உள்ளிட்ட திரளான பாஜகவினா் பங்கேற்று நிகழ்ச்சியை பாா்த்தனா். பிரதமரின் உரை தமிழாக்கம் செய்யப்பட்டு கட்சியினருக்கு விளக்கப்பட்டது.

Advertisement

Advertisement