முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் நாளை குடிநீா் விநியோகம் இருக்காது

மயிலாடுதுறை நகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி ஆணையா் (பொ) சணல்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 24 ஜூன் 2022, 10:04 pm IST
பகிர்:

மயிலாடுதுறை நகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி ஆணையா் (பொ) சணல்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முடிகண்டநல்லூா் கொள்ளிடம் தலைமை குடிநீரேற்று நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை நகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், அகரமணல்மேடு பகுதியில் குடிநீா் திட்ட குழாயில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே, நகராட்சி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments