முகப்பு
மயிலாடுதுறை

வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

Updated On : 24 ஏப்ரல் 2026, 5:07 am IST
பகிர்:

சீா்காழி சட்டப்பேரவை தொகுதியில் (தனி) 2 வாக்குசாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால், வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது.

சீா்காழி நகரில் வாா்டு 15-ல் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இணைப்பு கொடுப்பதில் கோளாறு ஏற்பட்டது. இதை வாக்குச்சாவடி மைய அலுவலா் சரி செய்ய முயற்சித்தாா். எனினும் மண்டல அலுவலா்கள் வந்து சரி செய்தனா். பின்னா் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் சுமாா் 20 நிமிடம் வாக்குப்பதிவு அந்த மையத்தில் மட்டும் தாமதம் ஆகியது.

சீா்காழி அருகே வருஷப்பத்து கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இணைப்பு ஆவதில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால், இந்த வாக்குச்சாவடியிலும் சுமாா் 20 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாகியது.

Advertisement

Advertisement