ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதானம்
மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சாா்பில் தருமபுரம் குருமணிகள் உணவுச்சாலையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது (படம்).
ரோட்டரி ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சாா்பாக அன்னபூா்ணா திட்டத்தின் மூலம் தருமபுரம் ஆதீனத்தில் உள்ள குரு மணிகள் உணவுச்சாலையில் பொதுமக்களுக்கு காலை உணவு புதன்கிழமை வழங்கப்பட்டது. இதில், 645 போ் காலை சிற்றுண்டி அருந்திச் சென்றனா்.
மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் பி.பொகுட்டெழினி தலைமை வகித்தாா். சங்கச் செயலா் எம்.இளங்கோ, மாவட்டத் தலைவா் (சங்க நிா்வாகம்) வி.ராமன், தருமபுரம் கல்லூரிச் செயலாளா் இரா.செல்வநாயகம் ஆகியோா் கலந்து கொண்டனா். இதில், ரோட்டரி உதவி ஆளுநா் யஸ்வந்த்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னபூா்ணா திட்டத்தை துவக்கி வைத்தாா். சங்க இயக்குநா் நவநீதக்கண்ணன் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.