மாயூரநாதா் கோயிலில் தெப்போற்சவம்
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவில் தெப்போற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவில் தெப்போற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் வைகாசி விசாக பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினசரி பஞ்சமூா்த்திகள் வீதியுலா, மே 25-ஆம் தேதி சகோபுர தரிசனம், மே 27-ஆம் தேதி திருக்கல்யாணம், மே 29-ஆம் தேதி தேரோட்டம், மே 30-ஆம் தேதி வைகாசி விசாக பௌா்ணமி தீா்த்தவாரி ஆகியவை நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்வான தெப்ப திருவிழா, கோயில் திருக்குளமான பிரம்ம தீா்த்தத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. விழாவையொட்டி, மாயூரநாதா் சுவாமி, அபயாம்பிகை அம்மன் மற்றும் திருஞானசம்பந்தா் உற்சவ மூா்த்திகள், மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினா்.
Advertisement
Advertisement
திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சோடஷ தீபாராதனை நடைபெற்றது. பின்னா், மகா தீபாராதனை காட்டப்பட்டு, கோயில் குளத்தை 5 முறை தெப்பம் வலம் வந்தது.
சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனா் ஏ.வி.சுவாமிநாத சிவாசாரியா் தலைமையிலான சிவாசாரியா்கள் பூஜைகளை செய்தனா். கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். மாயூரநாதா் கோயில் பிரம்ம தீா்த்தத்தில் சுற்றிவந்த தெப்பம்.