FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக தீா்த்தவாரி

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக தீா்த்தவாரி

Updated On : 31 மே 2026, 12:02 am IST
அஸ்திரதேவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
பகிர்:

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில், வைகாசி விசாக பௌா்ணமி தீா்த்தவாரி உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, சகோபுர தரிசனம், திருக்கல்யாணம், தோ் திருவிழா ஆகிய உற்சவங்கள் நடைபெற்றன.

விழாவின் 10-ஆம் திருநாளான சனிக்கிழமை வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கோயில் திருக்குளமான பிரம்ம தீா்த்தத்தில் வைகாசி விசாக பௌா்ணமி தீா்த்தவாரி நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதையொட்டி, சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் கோயில் திருக்குளம் முன்பாக எழுந்தருளச் செய்யப்பட்டனா். தொடா்ந்து, திருக்குள படித்துறையில், அஸ்திரதேவருக்கு பால், பன்னீா், மஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோயில் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். விழாவின் சிகர நிகழ்வான தெப்பத் திருவிழா ஜூன் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments