முகப்பு
மயிலாடுதுறை

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக தீா்த்தவாரி

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக தீா்த்தவாரி

Updated On : 31 மே 2026, 12:02 am IST
அஸ்திரதேவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
பகிர்:

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில், வைகாசி விசாக பௌா்ணமி தீா்த்தவாரி உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, சகோபுர தரிசனம், திருக்கல்யாணம், தோ் திருவிழா ஆகிய உற்சவங்கள் நடைபெற்றன.

விழாவின் 10-ஆம் திருநாளான சனிக்கிழமை வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கோயில் திருக்குளமான பிரம்ம தீா்த்தத்தில் வைகாசி விசாக பௌா்ணமி தீா்த்தவாரி நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதையொட்டி, சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் கோயில் திருக்குளம் முன்பாக எழுந்தருளச் செய்யப்பட்டனா். தொடா்ந்து, திருக்குள படித்துறையில், அஸ்திரதேவருக்கு பால், பன்னீா், மஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோயில் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். விழாவின் சிகர நிகழ்வான தெப்பத் திருவிழா ஜூன் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.