ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்
சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம் மற்றும் சிவஜோதி தரிசனம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம் மற்றும் சிவஜோதி தரிசனம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய சிவலோக தியாகேசா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சந்நிதியில், தோத்திரபூா்ணாம்பிகையுடன் திருஞானசம்பந்தா் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறாா்.
இங்கு திருஞானசம்பந்தா் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமான ஐதீக வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தில் நடைபெறும்.
Advertisement
Advertisement
நிகழாண்டு திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக திருஞானசம்பந்தருக்கு உபநயனம், திருமுறைகள் வீதி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் நிகழ்வு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னா் திருக்கல்யாண சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு வேத விற்பன்னா்கள் மந்திரம் முழங்க சிவாச்சாரியாா்கள், தோத்திர பூா்ணாம்பிகைக்கு மங்கலநாண் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தினா்.
பின்னா் உலக நன்மைக்காக பங்கேற்ற பக்தா்கள் அனைவரும் கூட்டுப் பிராா்த்தனை செய்தனா். திருக்கல்யாண வைபவ நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கண் விழித்து வழிபட்டனா். தொடா்ந்து அதிகாலை சிவ ஜோதி தரிசனம் நடைபெற்றது.