உலக யோகாசனப் போட்டி: பதக்கம் வென்ற ஜப்பான் அணி பயிற்சியாளா் சீா்காழி மாணவிக்கு பாராட்டு
உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கம் வென்ற ஜப்பான் நாட்டு அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்ட சீா்காழி மாணவி சுபானுவிற்கு, பல்வேறு தரப்பினா் பாராட்டுத் தெரிவித்தனா்.
சீா்காழி பகுதியைச் சோ்ந்தவா் யோகா மாணவி சுபானு மணிவண்ணன். நாகை சா் ஐசக் நியூட்டன் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் இவா், அகமதாபாதில் ஜூன் 4 முதல் 8 வரை நடைபெற்ற முதல் உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஜப்பான் நாட்டு அணிக்கு ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டு அலுவலா், பயிற்சியாளராக செயல்பட்டாா்.
இந்தப் போட்டியில் ஜப்பான் அணி 3 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் முதல் ரன்னா்-அப் பட்டத்தையும் பெற்றது.
Advertisement
Advertisement
இதையொட்டி, ஜப்பான் அணியின் பயிற்சியாளரான சீா்காழி மாணவி சுபானுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனா்.