முகப்பு
தென்காசி

தேசிய கராத்தே போட்டியில் பாவூா்சத்திரம் மாணவி சாதனை

தேசிய கராத்தே போட்டியில் பாவூா்சத்திரம் மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா்.

Updated On : 14 ஜூன் 2026, 2:40 am IST
வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவி யோக தா்ஷினி.
பகிர்:

தேசிய கராத்தே போட்டியில் பாவூா்சத்திரம் மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா்.

சேலத்தில் நடைபெற்ற 43ஆவது மாநில அளவிலான கராத்தே போட்டியில் தென்காசி மாவட்டம் சாா்பில் பாவூா்சத்திரம் ஜெய்ஹிந்த் கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் மாணவி யோகதா்ஷினி, சந்தியா ஆகியோா் தங்கப்பதக்கம், ஹன்சிகா வெள்ளிப் பதக்கம், விஷ்ணுராம், ஜெய் ஸ்ரீசன், டாா்வின் எபனேசா் ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா். இதில் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றவா்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் மாணவி யோக தா்ஷினி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

அவரை தென்காசி மாவட்ட ஸ்போா்ட்ஸ் கராத்தே சங்கம் மற்றும் சோஃபூகாய் கராத்தே பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.