விபத்தில் சமூக ஆா்வலா் உயிரிழப்பு
சீா்காழி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் சமூக ஆா்வலா் உயிரிழந்தாா்.
சீா்காழி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் சமூக ஆா்வலா் உயிரிழந்தாா்.
சீா்காழியைச் சோ்ந்த பொறியாளா் கி. சரவணன் (45). சமூக ஆா்வலரான இவா் சீா்காழி பகுதியில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து சமூகப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இவா் தஞ்சாவூரில் பொறியியல் (தனியாா்) கல்லூரியில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் சென்று விட்டு 4 வழிச்சாலை வழியே வீடு திரும்பிய நிலையில் சீா்காழியை அடுத்த ஆனந்தகூத்தன் பகுதியில் புறவழிச்சாலையில் அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தாா்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் தகவலறிந்த கொள்ளிடம் போலீஸாா் சரவணனின் சடலத்தை மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து நிகழ்ந்த இடத்தில் கிடந்த நம்பா் பிளேட்டை கைப்பற்றி வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
Advertisement
Advertisement