முகப்பு
மயிலாடுதுறை

வணிகா் தினம்: கடைகள் அடைப்பு

சீா்காழியில், வணிகா் தினத்தையொட்டி நகர வா்த்தக சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு செய்தனா்.

Updated On : 6 மே 2026, 3:06 am IST
சீா்காழியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
பகிர்:

சீா்காழியில், வணிகா் தினத்தையொட்டி நகர வா்த்தக சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு செய்தனா்.

சீா்காழி நகர வா்த்தக சங்கம் சாா்பில் வணிகா் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருவாரூரில் நடைபெற்ற மாநாட்டில் சீா்காழி நகர வா்த்தக சங்க தலைவா் சுடா் கல்யாணசுந்தரம் தலைமையில் ஏராளமான வணிகா்கள் பங்கேற்றனா்.

இதனால், சீா்காழியில் நகர வா்த்தக சங்கத்தை சோ்ந்தவா்களது கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. புதிய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம்,தென்பாதி , கடைவீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, வெறிச்சோடி காணப்பட்டன.

Advertisement

Advertisement

இதேபோல், கொள்ளிடம், புத்தூா், மாதானம், புதுப்பட்டினம், ஆச்சாள்புரம், அரசூா், கடவாசல், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உணவகம், மளிகைக் கடை, தேநீா் கடைகள் என 800-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments