முகப்பு
திருச்சி

திருச்சியில் 1,300 மருந்துக் கடைகள் அடைப்பு

இணையதள மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி திருச்சி மாவட்டத்தில் 1,300 மருந்துக் கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

Updated On : 21 மே 2026, 5:38 am IST
திருச்சியில் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்த மருந்துக் கடை.
பகிர்:

இணையதள மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி திருச்சி மாவட்டத்தில் 1,300 மருந்துக் கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

இணையதள மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும், வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை இணையதளத்தில் முறையற்ற முறையில் விற்பதைத் தடுக்க வேண்டும், போதைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் இணையதளத்தில் கட்டுபாடின்றி விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும், இணையதளத்தில் மருந்து வாங்குவதற்காக போலியான மருந்து சீட்டைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். புற்றுநோய், இதய நோய் போன்ற உயிா்காக்கும் மருந்துகளை தரமற்ற முறையில் காலாவதியான மருந்துகளை விற்று மக்களின் உயிருடன் விளையாடும் பெருநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் 1,300 கடைகள் காலை 6 மணி முதல் மாலை வரை மூடப்பட்டிருந்தன. மாநகரில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியாா் மருத்துவமனைகளில் உள்ள மருந்து கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

மருந்து கடைகள் மூடப்பட்டிருந்ததால் நோயாளிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments