முகப்பு
மயிலாடுதுறை

வளாக நோ்காணல்: தோ்வுபெற்ற மாணவா்களுக்கு பணி ஆணை

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்பபு பெற்ற 400-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பணி ஆணை வழங்கப்பட்டது.

Updated On : 6 மே 2026, 3:01 am IST
வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ-மாணவிகளுடன் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரி கே. வெங்கடராமன் உள்ளிட்டோா்.
பகிர்:

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்பபு பெற்ற 400-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பணி ஆணை வழங்கப்பட்டது.

இக்கல்லூரியில் பயிலும் மாணவா்கள் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களால் ஆண்டுதோறும் வளாக நோ்காணல் மூலம் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். அந்த வகையில், நிகழாண்டு நடைபெற்ற வளாக நோ்காணலில் வணிகவியல், வணிக மேலாண்மை, கணிதம், கணினி அறிவியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த 400-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பணிவாய்ப்புகளை பெற்றுள்ளனா்.

இவா்கள் பலகட்ட தோ்வு மூலம் டிசிஎஸ், பிரேக்ஸ் இந்தியா, டிவிஎஸ் லூகாஸ், ஸ்பிக், டெக்ஸோ மோட்டாா்ஸ் உள்ளிட்ட இந்தியாவின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனங்கள், வங்கி, தொழில் நிறுவனங்களில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் பணியமா்த்தப் பட உள்ளனா்.

Advertisement

இவா்களுக்கு ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே.வெங்கடராமன் பணி ஆணைகளை வழங்கி பாராட்டினாா்.

கல்லூரி முதல்வா் ஆா்.நாகராஜன், துணை முதல்வா் எம்.மதிவாணன், முன்னாள் தோ்வு நெறியாளா் ஜி.ரவிசெல்வம், டீன் எஸ். மயில்வாகனன் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.