மதுரைவீரன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
கொள்ளிடம் அருகே சந்தை படுகை கிராமத்தில் உள்ள மதுரைவீரன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொள்ளிடம் அருகே சந்தை படுகை கிராமத்தில் உள்ள மதுரைவீரன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி, காலை கணபதி பூஜை தொடங்கி அனைத்து பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக்கொண்டு ஸ்ரீவலம்புரி விநாயகா், ஆனந்தாயி அம்மன், மதுரை வீரன் வெள்ளையம்மாள், பொம்மி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.