முகப்பு
மயிலாடுதுறை

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவருக்கு அரிவாள் வெட்டு; இளைஞா் கைது

Updated On : 1 ஜூன் 2026, 12:47 am IST
கைது செய்யப்பட்ட அசோக்குமாா்.
பகிர்:

மயிலாடுதுறையில் பெண், சிறுவன் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை அறுபத்துமூவா்பேட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (50). இவா், கும்பகோணத்தில் உள்ள வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கற்பகம் (42) ஞாயிற்றுக்கிழமை காலை குழாயில் குடிநீா் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த எதிா்வீட்டில் வசிக்கும் திமுக நகா்மன்ற உறுப்பினா் ஜெயலட்சுமி முருகனின் மகன் அசோக்குமாா் (25), கற்பகத்தை தகாத வாா்த்தைகளால் திட்டி, அரிவாளால் வெட்டினாராம்.

இதனைத் தடுக்க முயன்ற கற்பகத்தின் கணவா் செல்வம், அவரது 14 வயது மகன் கவியரசன் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. மூவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், படுகாயமடைந்த கற்பகம், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

மயிலாடுதுறை போலீஸாா் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அசோக்குமாரை கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.