வேதாரண்யத்தில் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரி விவகாரத்தில், மத்திய அரசைக் கண்டித்து வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பெண்கள் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி விவகாரத்தில், மத்திய அரசைக் கண்டித்து வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பெண்கள் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முத்துலெட்சுமி மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். வெற்றிச்செல்வி காமராஜ், உமா புகழேந்தி, ஜெயலெட்சுமி குமரவேல், மாசி. சித்ரா, மோகனா தசமணி, பானுமதி ராஜன், கவிதா அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி நீர் விவசாயிகளின் வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல், கொள்ளிடம்- வேதாரண்யம் கூட்டுக் குடிநீரின் ஆதாரமாக இருப்பதை விளக்கிய அவர்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென முழக்கமிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.